×

பெண் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாண்டியராஜன் (39) வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு எம்ஜிஆர் அரசு தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அன்னியம்மாள் (39). இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது. தம்பதியர்க்கு விஷ்ணு (16) என்ற மகனும், லத்திகா (15) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் துணிகளை சரியாக துவைக்கவில்லை என்று கூறி பாண்டியராஜன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், கோபமடைந்த மனைவி அன்னியம்மாள், கணவருடன் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்துள்ளார்.

எனவே, இரவு பாண்டியராஜன் குழந்தைகளுடன் ஹாலில் படுத்துக்கொண்ட நிலையில் அன்னியம்மாள் பெட்ரூமில் தனியாக படுத்து உறங்கியுள்ளார். பின்னர், நேற்று காலையில் மகன் விஷ்ணு பெட்ரூமை திறந்து பார்த்தபோது, அன்னியம்மாள், மின்விசிறியில் வேட்டியால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் அன்னியம்மாளை மீட்டு, 108 ஆம்புலன்ஸ மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அன்னியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், அன்னியம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Pandiyarajan ,Tamil Nadu Housing Board ,Kanchipuram Collector ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...